Showing posts with label தென்கச்சி பக்கங்கள். Show all posts
Showing posts with label தென்கச்சி பக்கங்கள். Show all posts

Friday, November 6, 2009

வயித்துல குதிரை!

கிச்சு கிச்சு மூட்டும் இந்தக் குட்டிக் கதையை மறைந்த தென்கச்சி சுவாமிநாதன் ஸ்டைலில் படித்து ரசியுங்கள்!

இந்த உலகில் முட்டாள்களும் ஒரு வகையில் பைத்தியக்காரர்கள் மாதிரி தான். அவர்கள் சொல்வது தான் சரி என்று கடைசி வரை சாதித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.

"சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?"

"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"

"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்."

"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"

"சரி எதனால வலி?"

"நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!"

"ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!"

உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்.

அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.

"அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"

"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"

"நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே..அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது"

"அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா?"

"வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்"

அவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.

"பளார்!!"

எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "எதுக்குய்யா என்னை அடிச்சே" என ஆவேசமாக கேட்டார்.

"நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"

டாக்டர் மயங்கி விழுந்தார்.

இது போன்ற அவரது அனைத்து நகைச்சுவை கதைகளும் அம்புலிமாமா இணையதளத்தில்!!

Tuesday, October 6, 2009

பிரபல எழுத்தாளராவது எப்படி?

நகைச்சுவைப் பேச்சாலும், எழுத்தாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தென்கச்சி சுவாமிநாதன் நம்மை விட்டுப் பிரிந்தாலும், தனது நகைச்சுவை படைப்புக்களை அம்புலிமாமா இணையதளத்தில் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். அந்தப் பொக்கிஷத்திலிருந்து மிகச்சிறிய குண்டுமணி இதோ...



"சார் என்ன யோசிக்கிறீங்க"

"அடுத்தபடியா என்ன நாவல் எழுதலாம்னு யோசிக்கிறேன்"

"நீங்க தொடர்ந்து எழுதணும். நிறைய எழுதணும், எழுதிக் குவிக்கணும். அதான் என்னுடைய ஆசை!"

"எனக்கு இப்படி ஒரு விசிறியா? ரொம்ப மகிழ்ச்சி.நீங்க என்னை புரிஞ்சிகிட்ட அளவுக்கு பதிப்பகங்கள் என்னை புரிஞ்சிக்க மாட்றாங்க. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு"

"அதை பொருட்படுத்தாதீங்க சார். நீங்க பாட்டுக்கு எழுதிட்டே இருங்க! அமெரிக்க நாடக ஆசிரியர் ஒருத்தர் இப்படித்தான்... பல நாடகங்களை எழுதினார். அவருடைய படைப்புகளை பிரசுரிக்கறதுக்கு யாரும் முன் வரலை. பசியாலும் பட்டினியாலும் வாடினார். ஒரு நாள் அவருடைய நாடகங்கள் அத்தனையையும் ஒரு மூட்டையா கட்டி மளிகைக் கடையில எடைக்கு போட்டு வித்துட்டார். மளிகைக் கடைக்காரர் ஒவ்வொரு பக்கமாக் கிழிச்சி பொட்டலம் கட்டி விக்கிறப்போ, சில பக்கங்கள் ஒரு பதிப்பகத்து முதலாளி கையில் கிடைச்சது.

அந்த பக்கங்கள் ரொம்ப அருமையா இருந்ததால,ஓடிப் போய் பொட்டலம் கட்டாம இருந்த பக்கங்களை வாங்கி பிரசுரிச்சாங்க. அதுக்கப்புறம் அந்த நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி. ஏகப்பட்ட பணம் புகழ் எல்லாம் வந்து சேர்ந்தது சார்"

"அவர் யாரு?"

"அவரு தான் பிரபல நாடக ஆசிரியர் இப்சன்!"

"அவரு மாதிரியே நானும் ஒரு நாள் பிரபலமாவேன்."

"அதுக்கு நேரம் வந்தாச்சி சார். அதனால தான் நான் வந்திருக்கேன். உங்க படைப்புகள் அத்தனையையும் வாங்கப் போறேன்!"

"அப்படியா... ரொம்ப நன்றி. எந்த பதிப்பகம் நீங்க?"

"பதிப்பகம் இல்ல சார். மளிகைக் கடை!"


இது தென்கச்சியாரின் நகைச்சுவை வெள்ளத்தில் ஒரு துளி தான். வெள்ளத்தில் நீந்தி சிரிப்பில் திக்குமுக்காட...
அம்புலிமாமா இணையதளம் செல்லுங்கள்.