Monday, October 12, 2009

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

அம்புலிமாமா வலைத்தளத்தின் சுவாரஸியமான பகுதிகளில் இருந்து ஒரு சாம்பிள்...

"என்னைப் பார்..யோகம் வரும்", "கண்ணைப் பார் சிரி" இது போன்ற வாசகங்களைக் கொண்ட திர்ஷ்டிப் படங்கள் எல்லாம் பழைய ஸ்டைல். மீனுக்கு பச்சை குத்தி வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது தான் தற்போதைய திருஷ்டி ஸ்டைல்!

மூட நம்பிக்கைகளை ஹைடெக்காக பின்பற்றுவதில் சீனர்களுக்கு நிகர் யாருமில்லை. வீட்டில் வாஸ்து மீன்களை வளர்த்தால் கோடீஸ்வரர்களாகலாம் என்பதை உலகுக்கு சொல்லித்தந்த சீனாவில், மீன்களை வைத்து அதிரடியாக புதிய மூடப் பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். செங்க்டு என்ற பகுதியில் உள்ள மிகப் பெரிய வளர்ப்பு விலங்குகள் சந்தையில், கிளி மூக்கு மீன் என்றழைக்கப்படும் வாஸ்து மீன்களின் உடலில் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல பல வண்ணங்களில் பச்சை குத்தித் தருகின்றனர்.

தொழில் செய்யும் வாடிக்கையாளர் எனில் "முதலாளி.. உங்க வியாபாரம் இனிமேல் சூப்பர்" என்பது போன்ற வாசகங்களை சீன மொழியில் பச்சை குத்தித் தருகின்றனர். வீடுகள் என்றால், சில சின்னங்கள், வீட்டிலிருப்போரின் ராசியான எண்களை பச்சை குத்தித் தருகின்றனர்.

இந்த மீன்களை வாங்கிச் சென்று வளர்த்தால், வளம் பெருகுவதாக செய்திகள் உலவுவதால், ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த மீன்களை வாங்கிச் செல்ல மக்கள் போட்டி போடுகின்றனர்.

"சீன்ன மீன் என்பதால் தானே பச்சை குத்தி அதை இம்சை செய்றாங்க...சுறாவும் மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்" என உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இது போன்ற விசித்திரமான, விந்தையான செய்திகள் www.ambulimama.com தளத்தில் காணலாம்!

தமிலிஷ் பட்டையில் ஓட்டு போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி அனைவரும் பயனடைய உதவுங்கள்!

No comments:

Post a Comment